Tamil Murli 15 March 2018 - BK Saravana Kumar
Tamil Murli Churning 15 March 2018 - BK Sneha
Tamil Murli Churning 15 March 2018 - BK Akila
அற்புதமான பாடசாலையில் அன்பான நம் தந்தை ஆசிரியராகவும் நமக்கு ஞான அமிர்தத்தை அருந்தக்கொடுக்கிறார்
ஜின் பூதத்தை போல பிஸியாக உண்ணும் போதும்,நடமாடும் போதும் புத்தியை மற்றவையிலிருந்து விலக்கி தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதிலே புத்தியை ஈடுபடுத்துவதே நாம் அவரது கட்டலைப்படி தந்தைக்கு செய்யும் மிகப் பெரிய உதவியாகும்.
மனிதர்கள் பக்தியில் பாடியவைகளை தந்தை நமக்கு நடைமுறையில் ஞானதில் புரிய வைக்கிறார். புதிய உலகம் இருந்தது இப்போது அது தூய்மையற்று பழைய உலகமாகிவிட்டது பதீதப்பாவனர் தந்தை ஞான அமிரதம் கொடுத்து மீண்டும் புதுப்பிக்கிறார் புது உலகம் சுகம் நிறைந்த உலகம் என்பதை தனக்குள் பேசிக்கொள்ள வேண்டும்.
பாபா ஞானக்கடலாக இருக்கிறார் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஞான கங்கைகளாகிய நாம் நினைத்த இடத்தில் ஞானத்தை கொடுக்க முடியும்.
நாம் இப்போது பிராமணராக இருக்கிறோம், பிறகு மீண்டும் நாம் தான் தேவதைகளாக ஆகிறோம். 84 பிறவிகளின் கணக்கு-வழக்கு நம் புத்தியில் உள்ளது. இப்போது நாம் சூத்திர குலத்தவராக உள்ளோம். நம்முடைய தர்மத்தை மறந்து தர்மத்திற்கும் கர்மமும் தரம் குறைந்து மிகவும் ஏழையாக ஆகிவிட்டிருக்கிறோம்.
இப்போது பாபாவின் குழந்தைகளாகி மீண்டும் தேவதையாகி கொண்டிருக்கிறோம்.
மனிதர்கள் தான் தேவி-தேவதை ஆக முடியும். மனிதர்கள் உலகத்திற்கு எஜமானர் ஆக முடியும். பாபா கொடுக்கின்ற சுகம் வேறு யாரும் கொடுக்க முடியாது. பாபா, ஒருவர் தான் நம்மை உலகத்திற்கு எஜமானர் ஆக்குகிறார்.
தந்தை வந்து தேவதா தர்மத்தை மீண்டும் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். மற்ற தர்மங்கள் அனைத்தும் அழிந்து விடும். மகாபாரத யுத்தமும் முன்னாலேயே உள்ளது.
இந்த அனைத்து விஷயங்களையும் தாரணை செய்து மற்றவர்களையும் தாரணை செய்ய வைக்க வேண்டும். பாவம், வழித் தெரியாமல் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
சத்யுகத்தில் அகால மரணம் ஏற்படுவதில்லை. உடல் நலம், செல்வம் மகிழ்ச்சி 21 பிறவிகளுக்குக் கிடைக்கின்றது. இது ஒரு தந்தையை தவிர யாரும் கொடுக்க முடியாது.
பாபா கொடுக்கும் ஸ்ரீமத் படி நடந்து அன்பாக அவரை நினைவு செய்து உயர்ந்தவராக வேண்டும்.
பாபா நீங்கள் கொடுக்கும் படிப்பால் நாங்கள் ராஜாக்களாகிறோம் தங்களை தவிர இந்த சுகத்தை வேறு யாரும் தர முடியாது என பாபாவோடு அன்பான ஆன்மீக உரையாடல் நடத்த வேண்டும்
சூட்சம சக்தியால் சோதித்து பார்த்து யார் சிறப்பான முறையில் மனம்-புத்தி சமஸ்காரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாறோ அவரே கர்மேந்திரியங்களையும் நியமப்படி நடத்தும் சுய ராஜ்ய அதிகாரி ஆவார்.
சூட்சம சக்திகளை யார் சிறப்பாக கையாளுகிறாரோ ஆவரே மற்றவர்களையும் கையாள முடியும்
No comments:
Post a Comment