Pages

Friday 16 March 2018

16 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila




16 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila



16 March 2018 Tamil Murli Churning - BK Sneha




16 March 2018 Tamil Murli Churning - BK Akila

புத்துணர்வோடும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை ஞானக்குளியல் செய்ய வேண்டும். இதன் முலம் 
1.சதா மகிழ்ச்சி நிறைந்தவராக இருக்க முடியும்.
2.அதிர்ஷ்டசாலியாகி விடுவோம்.
3.அனைத்து வித சந்தேகமும் நீங்கி விடும்.
4.மாயாவாக இருக்கும் மனிதர்களின் சகவாசத்திலிருந்து தப்பித்து விட முடியும்.
5. தந்தை மற்றும் ஆசிரியர் குஷியடைவார்கள். 
6. மலர்களாக ஆகி அளவற்ற குஷியுடன் இருக்க முடியும்.

இவ்வாறு ஞானக்குளியல் செய்யாவிட்டால் ராஜ்யத்தை இழக்க வேண்டியிருக்கும்.

சொர்கத்தின் எஜமானர் ஆவதற்கு கலுத்து வெட்டுபட்டாலும் தந்தையிடம் செல்வதை நிறுத்தக்கூடாது. தந்தை நம் ரெஜிஸ்ட்டரை அடிக்க check செய்கிறார்.

இது கீதாபாடசாலையாகும் சிவபாபா தாய், தந்தையாக இருக்கின்றார், ஆசிரியராக இருக்கின்றார் என்றால் குஷி ஏற்படுகிறது. படிப்பது தான் குழந்தைகளின் கடமை.யார் நல்ல முறையில் படிக்கிறார்களோ அவரகளுக்கு அளவற்ற குஷி இருக்கும்.

இங்கு நாயகிகள் என்பது பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் குறிக்கும், நாயகன் ஒரு சிவபாபா தான் நாயகிகளாகிய நம்மை அழைத்துச்செல்ல வந்திருக்கிறார், நாம் அனைவரும் அவரை நினைவு செய்கிறோம்.

ஞானம் மற்றும் யோகம் இரண்டும் சகோதரன் சகோதரியாகும். ஞானத்தின் மூலம் ஜீவன்முக்தி கிடைக்கிறது.

எனக்கு சாட்சாத்காரம் கிடைத்தால்  நான் முயற்சி செய்வேன் என யாரும் கூற முடியாது. எதிரில் கிருஷ்ணரின் சித்திரத்தை பார்த்துக் கொண்டு நான் இவ்வாறு இளவரசர், இளவரசி ஆகின்றோம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் 

கடைசி நிலை எப்படியோ அப்படியே அடுத்த பிறப்பு என்று கூறப்பட்டிருக்கிறது  கடைசியில் தந்தையை நினைவு செய்தால் நல்ல கதி கிடைக்கும். நினைவு ஆழமாக இருந்தால் தான் கடைசி நேரத்தில் ஆடாத அசையாத மனநிலை இருக்கும்.

இப்போது நாம் தந்தையை நினைவு செய்து பாரத்தை இன்சூர் செய்கிறோம் பின் புதுயுகம் வந்த பிறகு அவரவர் உடல் மனம் செல்வம் இன்சூர் செய்த அளவு பலனை அடைவார்கள்.

 பாபா தன் பக்கம் இழுக்கின்றார், மாயாவி கணவர்கள் தன் பக்கம் இழுக்கின்றனர். இடையில் அபலைகள் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். எந்த அளவுக்கு இரண்டு முறை ஞானக்குளியல் செய்யவில்லையோ அதுவரை நன்மை ஏற்படாது.

ஏதாவது ஒரு நேரத்தில் முரளியில் அந்த மாதிரி கருத்துக்கள் வெளிப்படும், அதன் மூலம் அனைத்து சந்தேகங்களும் நீங்கி இதிலிருந்து விடும்படியான அம்பு பாயும்.

இந்த கடைசி பிறவியில் திருமனம் செய்து கொண்டால் கனவன்/ மனைவி குழந்தைகள் தாய் வீடு புகுந்த வீடு என பற்றின் வலை அதிகரித்துவிடும்.

ஒவ்வொரு வீட்டையும் சொர்க்கமாக மாற்றி சித்திரத்தை வைத்து. யார் வந்தாலும், சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்களா? என்று கேட்டு  தந்தை அவ்வாறு மாற்றுகிறார் என்பதை பரிய வைக்க வேண்டும்.

தனது அசுத்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று கூறிவிட்டனர். இப்படிப்பட்டவரின் சகவாசத்தில் ஒருபோதும் மாட்டிக் கொள்ளக்கூடாது.

இப்போது தூய்மையாகாவிட்டால் பிறகு 
தர்மராஜர் மூலம் அதிக தண்டனை அடைய வேண்டி யிருக்கும்.

சிவபாபா தாத்தா பிரம்மா தந்தையாக இருக்கிறார் நாம் சிவபாபாவின் பேரக்குழந்தைகள் தாத்தாவின் நினைவு இல்லை என்றால் எவ்வாறு ஆஸ்தியை அடைய முடியும்.

இங்கு நியமங்களும் மிகக் கடுமையாக இருக்கிறது. அவசியம் தூய பிராமணர்களாக ஆக வேண்டும். ஏமாற்றுவதற்காக மம்மால பாபா என்று கூறக் கூடாது. உண்மையானவராக இருக்கும் போது தான் போதை அதிகரிக்கும்.

நான் பாரதத்தை மீண்டும் வைரமாக ஆக்குவேன் என்று பகவான் பாரதத்தின் பின்னால் பைத்தியம் போன்று இருக்கிறார் என்றால் பாரதத்திற்கு நாயகனாக இருக்கிறார். நாயகன் நாயகியின் பின்னால் பைத்தியம் போன்று ஆகிவிடுவார் அதுப்போல பாரதவாசிகளின் பின்னால் பைத்தியமாக இருக்கின்றார்! எவ்வளவு தூரத்திலிருந்து ஓடி வருகின்றார் மற்றும் எவ்வளவு நிர்அகங்காரியாக இருக்கிறார்.

பிராமன ஜென்மம் எடுத்தவுடனே நமக்கு பாப்தாதா குஷி என்ற பரிசை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் முகமும் புன்முறுவலுடன் இருக்க வேண்டும் என்பத தந்தை மற்றும் அனைவரின் விருப்பமாகும்.

எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விட்டேன், அடைவதற்கு என்ன இருக்கிறது. நான் குஷியாக இல்லை என்றால் வேறு யார் குஷியுடன் இருக்க முடியும் என்ற இந்தப் பாடலை மனதுக்குள் போதையுடன் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.


நிராகாரி, நிர்அகங்காரி நிலையில் நிலைத்திருந்து,உலகை பிரகாசிக்கச் செய்பவர்கள் தான் உயர்ந்த தீபங்கள்.




No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality